வருகிற ஏப்ரல் 6ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தை மே 10ம் தேதி வரை நடத்த முடிவு : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு



சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி, மே 10ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து 19ம் தேதி வேளாண் பட்ெஜட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வருகிற ஏப்ரல் 6ம் தேதி (புதன்) முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog