திடீரென தீ பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - அலறியடித்து வெளியேறிய பயணிகள் - 8 பயணிகளுக்கு நேர்ந்த கதி!


திடீரென தீ பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - அலறியடித்து வெளியேறிய பயணிகள் - 8 பயணிகளுக்கு நேர்ந்த கதி!


சேலம் அருகே தனியார் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, சேலம் மாவட்டம், சாம்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதையடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 11 பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்ட நிலையில், பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog